Sunday 19th of May 2024 01:34:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
3 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசியக் கொடி!

3 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசியக் கொடி!


அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளாா்.

கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் அதிகளவானோா் உயிரிழந்துள்ளதுடன் 16 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பால் நாங்கள் 96 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கைளை இழந்துள்ளோம். அவர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என தனது ருவிட்டரில் ட்ரம்ப் கூறியுள்ளாா்.

மேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த இராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கௌவுரவிக்கும் வகையில் திங்கட்கிழமை தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

கொரோனா தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டவுள்ள இந்த சோகமான நாளில் அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE